என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதியவர் அடித்து கொலை"
- திண்டுக்கல் அருகே சொத்து தகராறில் முதியவரை வாலிபர் அடித்து கொன்றார்.
- சொத்து தகராறு, முதியவர் அடித்து கொலை
வேடசந்தூ:
திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி அருகில் உள்ள பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது62). இவர் தனது மனைவி குழந்தை தெரசு மற்றும் மாமனார் அமல்ராஜ் ஆகியோருடன் ஒத்தையூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
ஆேராக்கியசாமிக்கும் அவரது தம்பி மகனான பிரவீன்குமார் (27) என்பவ ருக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. உறவினர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இன்று ஒத்தையூரில் உள்ள அமல்ராஜ்வீட்டிற்கு பிரவீன்குமார் வந்தார். அப்போது அங்கு ஆரோக்கியசாமி சாப்பிட்டு க்்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் சொத்து பிரச்சினை தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரவீன்குமார் உருட்டு கட்டையால் ஆரோக்கிய சாமியின் தலையில் கொடூரமாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதை பார்த்ததும் பிரவீன்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பாஸ்கரன், வேட சந்தூர் டி.எஸ்.பி. மகேஷ், இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி, பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆரோக்கியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேட சந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிரவீன்குமாரை தேடி வருகின்றனர்.
சொத்து பிரச்சினையால் பெரியப்பாவையே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்